தாயுமானவளான ஆனந்தவல்லி தாயார் 




                 அப்படிப்பட்ட நிலையில் உதவிக்கு ஒருவரும் இல்லாத சூழ்நிலையில் அக்குன்றிலுள்ள ஒரு பாறை மறைவில் ஒதுங்கி இறைவனை வேண்டிக்கொள்ள  , ஆனந்தவல்லி தாயாரே தாயுமானவளாக தோன்றி அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததாக இப்பகுதியை சேர்ந்த பெண்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இன்றைக்கும் இக்குன்றில் உள்ள ஒரு பாறையில் அமாவாசை தினத்தில் இரத்தம் போன்ற திரவம் வடிவதைக் காணலாம். எப்போது சென்றாலும் அந்த பாறையில் இரத்தம் ஒழுகி காய்ந்தது போன்ற தோற்றத்தைக் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இங்கு வந்து ஆனந்தவல்லி தாயாரை வேண்டிக்கொண்டால் சுகப்பிரசவம் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 






குரு பரிகார ஸ்தலம் : 


கச்சி ஏகம்பம் என்ற தொண்டை வளநாட்டில் முதலாம் பராந்தகச்சோழனால் உருவாக்கப்பட்ட ஜெயம் கொண்ட சோழமண்டலத்து, களத்தூர் கோட்டம், புலியூர் என்ற சதுர்வேத மங்கலம் எனப் போற்றப்பட்ட இப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஸ்தலமாகும். இங்கு பரமேஸ்வரன் குருவாக இருந்து நான்கு வேதங்களை உபதேசம் செய்ததால் சதுர்-வேத மங்கலம் எனத் திருப்பெயர் பெற்றது. 

இத்தலம் பிரகஸ்பதியான குரு பகவான் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். குருபகவானுக்கு அகந்தை ஏற்பட்டு இன்னல்படும் போது தனது சாபம் நீங்க வேண்டி இங்குள்ள அகத்தியதீர்த்தத்தில் நீராடி உச்சிக்கால வேளையில் ஈசனை தரிசனம் செய்து தனது சாபத்தை போக்கிக் கொள்கிறார். 

இதனால் இத்தலம் குரு பரிகார ஸ்தலமாகும். ஜாதகத்தில் குரு உச்சம் மற்றும் நீச்சம் உள்ளவர்கள் இவ்வாலய ஈசனை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.